Sunday, September 11, 2011

டிவிட்டர் - இந்த வாரம் ரசித்தவை..

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்'வியாதிகளுக்கும், பிணத்தை தேடி தின்னும் அகோரிகளுக்கும் என்ன வித்தியாசம்?


பெத்த பொண்ணுக்கும் பரிட்சை பேப்பருக்கும் ஒரே ஒத்துமை தாங்க...ரெண்டயுமே கட்டி கொடுக்கரவரைக்கும் தலவலிதான்#மூனுமுடிச்சி


பின்னிரவில் ரசித்த மெலடிக்கு இடைஞ்சல் என பாத்திரம் கழுவும் ஓசையை கடிந்து கூச்சலிட்ட வாய் கூச்சமின்றி ருசிக்கிறது காலைஉணவை,கழுவிய தட்டில்!


"ல‌வ் ப‌ண்ணுங்க‌ சார், லைஃப் ந‌ல்லா இருக்கும்" - மைனா; "மூடிட்டு ப‌டிங்க‌ சார், லைஃப் இன்னும் ந‌ல்லா இருக்கும்" - மை நைனா

நம்பிக்கையூட்டும் துப்புகள் கிடைத்துள்ளன: ப.சிதம்பரம் # பான் பராக்கா? மானிக் ச்ந்த்தா?!

ஆண்களின் நகலாய் இருப்பதில் எந்த பெண்ணுரிமையை நிலைநாட்ட போகிறார்கள்?

குண்டுவச்சவன பத்தி துப்பு கொடுத்தா 5 லட்சம் - புலனாய்வு துறை # என்னது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இல்லையா?
மும்பை தாக்குதல் அஜ்மல் வழ்க்கின் ஒருநாள் செலவு ரூ.1லட்சம் #இதுதாம்பா மறைமுக போர்

ஆண்கள் பல நல்ல முடிவுகளை "பாத்ரூம்"லும், பல மோசமான முடிவுகளை "பெட்ரூம்"லும் எடுக்கிறார்கள்

 
மன்னிப்பு ஒரு வார்த்தை போதும் பெண் மனதை மீண்டும் மீண்டும் தடுமாற வைக்க !
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பு # அது யாருயா... பிரதமரையே வெளிநாட்டுக்கு போகக்கூடாதுன்னு தடைவிதிக்கிறது

பாரில் மப்படித்தவன் "இன்றைக்கு என்ன கிழமை?" என்று கேட்கிறான்! அதற்கு "எனக்கு தெரியாது நான் வெளியூரு" என்கிறான் ஓவராக மப்படித்தவன் !

தனுஷ் ஒரு படத்தில் பைக்கை வைத்துகொண்டு அதில் யாரையும் ஏறவிடமாட்டார்..அது போல் இப்போது வைக்கோ..கட்சியை வைத்துகொண்டு...

சென்னை மாநகராட்சியை பா.ம.க கைப்பற்றும் - ஜி.கே.மணி # அண்ணே அது என்ன பாபா பட பொட்டின்னு நினைச்சீங்களா? அய்யோ,அய்யோ.!

பணத்திற்காக திருமணம் செய்யாதீர்கள் ! உலகத்தில் குறைந்த வட்டிக்கு பணம் கடனாக கிடைக்கிறது !

அம்மா முன்றெழுத்து கலைஞர் நான்கெழுத்து மாறி மாறி இவங்க நாட்ட ஆள்வது நம்ம தலையெழுத்து...
உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா # போடா போடா வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு !

 
தல சஸ்பென்சன்ல இருந்தாலே படம் ஓடுமாம்!!? அடங்கொப்பத்தா அவர் டியூட்டில இருந்தா மாதிரி நடிச்ச ஆஞ்சநேயா மறந்து போச்சா உங்களுக்கு?


புளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது.
அடப்பாவிங்களா.. அஜித்துக்கோ விஜயக்கோ ரசிகனா இல்லாம தமிழ்நாட்டுல ஒருத்தன் இருக்கவே முடியாதுங்கற மாதிரில்ல பேசுறீங்க.


இரண்டு பெக்’கை சாத்திவிட்டு இயற்கையன்னை நம்மைத் தழுவப்போகிறாள் என்று அருவியினுள் நுழைந்தால் தாளித்துவிட்டாள்! #என்னா அடி #குற்றாலம்

மேனஜரிடமும் மனைவியிடமும் எரிச்சலையும் காட்டமுடியவில்லை துணிச்சலையும் காட்டமுடியவில்லை # என்ன வாழ்க்கைடா?

அப்பாவை போலவே மாப்பிள்ளை வேண்டும் என தேடி திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் திருமணத்திலேயே அம்மா அதிகமாய் அழுகிறாள்.!

பூமில என்னென்ன இருக்குங்றதே பயலுகளுக்கு காதல் வந்தாதான் தெரியும் போல,பூவுங்குறானுக..நிலவுங்குறானுக..கடசியா கவிதங்கிறானுக :-)

டாக்டரை விட டோக்கன் நம்பர் கூப்பிடும் பையனின் பந்தா தாங்கமுடிவதில்லை..# மருத்துவமனை

 
நம்ம நாட்டுல டிரெயின் லேட்,பஸ் லேட்,ஜட்ஜ்மென்ட் லேட், ஆபிஸ்க்கு லேட், எல்லாமே லேட்,சரியா டைம்க்கு நடக்கிறது குண்டுவெடிப்பு மட்டும் தான்

எல்லோருக்கும் வரலாற்றில் இடமுண்டு,பாடப் புத்தகத்தில் இடம்பெருவது யார் எனபதில்தான் பிரச்சினை !

 
தனக்கு தெரியாத விஷயமே இல்லைங்கற தொணியில் பேசறவங்ககிட்ட கேக்கணும் #எப்ப சாவீங்கனு தெரிஞ்சா சொல்லுங்க!?

1 comment:

Post a Comment